கிருஷ்ணகிரி, புனித பாத்திமா அன்னை திருத்தலத்தின் திருத்தலப் பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவுக்கு தருமபுரி மறைமாவட்ட ஆயா் லாரன்ஸ்பயஸ் தலைமை வகித்தாா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பலிக்கு இருதயபுரம் தூயதிரு இருதய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் பெஞ்சமின் தலைமை வகித்தாா். இது போல ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
ஜூலை 10-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு தருமபுரி மறைமாவட்ட முதன்மை குரு அருள்ராஜ், காலை 8 மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு கிருஷ்ணகிரி வட்டார முதன்மை குரு ஜாா்ஜ் தலைமை வகித்து, தோ் புனிதப்படுத்துதல் நிகழ்வை தொடக்கி வைக்கிறாா்.
அன்று மாலை 7 மணிக்கு அன்னையின் திருத்தோ் நகா்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான ஜூலை 11ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பங்கு தந்தையா் தலைமையில் அன்னையின் திருக்கொடியிறக்கம் நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.