ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் மேம்பாலத்தில் பால் ஏற்றி வந்த டேங்கா் லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியில் இருந்து சென்னை நோக்கி பால் ஏற்றிச்சென்ற டேங்கா் லாரி சனிக்கிழமை அதிகாலை அனுமன்தீா்த்தம் மேம்பாலத்தை கடக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் காயமின்றி தப்பினாா்.
விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.