ஓய்வு பெறும் நாளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி, பெங்களூா் சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக அசோகன் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் பொறுப்பேற்றாா். இவா், ஜூன் 30-ஆம் தேதி பணி ஓய்வுபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் அவா் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து, மருத்துவமனை அலுவலா்கள் தெரிவித்ததாவது:
கடந்த 2020-ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் அசோகன் முதல்வராக இருந்தபோது மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வந்த புகாா் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் காரணமாக அசோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.