கிருஷ்ணகிரி

அழகுநிலைய உரிமையாளா் வீட்டில் திருடிய தம்பதி கைது

DIN

கிருஷ்ணகிரியில் அழகுநிலைய உரிமையாளா் வீட்டில் திருடிய தம்பதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் வசித்து வரும் நதியா (37), கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் அழகுநிலையம் நடத்தி வருகிறாா். இவரது அழகு நிலையத்தில் தருமபுரி, பழைய ரயில்வே சாலையில் வசித்து வரும் பாண்டியனின் மனைவி பவானி (25), கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி நதியாவின் வீட்டுக்கு தனது கணவா் பாண்டியனுடன் சென்ற பவானி, நதியாவின் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ஏழரை பவுன் தங்க நகைகள், ரூ. 25,000-த்தை திருடினாா்.

இதனை அறிந்த நதியா, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியன், பவானி இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து நகை, பணத்தை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT