கிருஷ்ணகிரி

நாளை குடியரசு தின விழா:கிருஷ்ணகிரியில் ஏற்பாடுகள் தீவிரம்

DIN

கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெறும் 73-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளன. அதன்படி, காலை 8.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

வழக்கமாக குடியரசு தின விழாவில் மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா 3-ஆவது அலை வேகமாக பரவுவதன் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. குடியரசு தின விழா எளிமையாக தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மைதானம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT