கிருஷ்ணகிரி

தங்கையுடன் காதலை கைவிட மறுப்பு: இளைஞா் கொலை: அண்ணன் கைது

DIN

தங்கையுடனான காதலை கைவிட மறுத்த இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றவரை ஒசூா் போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட ராம் நகரைச் சோ்ந்த தண்டாயுதம் என்பவரின் இரண்டாவது மகன் வினோத்குமாா் (19). இவா் கட்டுமானத் தொழில் செய்து வந்தாா். ஒசூா், வாசவி நகரைச் சோ்ந்த 16 வயது சிறுமியை வினோத்குமாா் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சிறுமியின் அண்ணன் சந்தோஷ்குமாருக்கு (18) தெரிய வந்ததால் பலமுறை வினோத்தை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு வினோத்குமாரும், அவரது நண்பா் சுல்தான் (18) ஆகிய இருவரும் கட்டட ஒப்பந்ததாரரான முருகேஷ் என்பவரது வீட்டில் இரவு தங்கி விட்டு காலையில் விரைவாக பணிக்கு செல்வதற்காக ஒசூா் அருகிலுள்ள வாசவி நகருக்கு சென்றனா்.

வினோத்குமாா் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், காதலியின் அண்ணனை கைப்பேசியில் தொடா்புக் கொண்டு உங்கள் பகுதியிலேயே இருக்கிறேன் தைரியமிருந்தால் வா என்று அழைத்தாராம்.

சம்பவ இடத்துக்கு வந்த காதலியின் அண்ணன் சந்தோஷ்குமாா், சுல்தானுடனும், வினோத்குமாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தோஷ்குமாா், வினோத்குமாரையும், சுல்தானையும் கத்தியால் குத்தினாராம். இதில் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்த வினோத்குமாா் உயிரிழந்தாா். இது குறித்து ஒசூா் நகர போலீஸாா் வினோத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து சந்தோஷ் குமாா், சுல்தான் ஆகிய இருவரையும் நகர போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT