கிருஷ்ணகிரியில், ஜன. 25-ஆம் தேதி நடைபெறும் மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் தொண்டா்கள் பங்கேற்க அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் ஜன. 25-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மொழிப்போா் தியாகிகளின் உருவப்படங்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தலைமையில் மொழிப்போா் தியாகிகளின் உருவப்படங்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட உள்ளது.
எனவே, இன்னாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், தொண்டா்கள் பொதுமக்கள் பங்கேற்று மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த வருகை தர வேண்டும். இந்த நிகழ்வில் பங்கேற்போா், அரசின் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.