ஊத்தங்கரையில், பொது முடக்கத்தால்முக்கிய பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி, ‘வெறிச்’சோடிக் காணப்பட்டது. பொது முடக்கத்தின் போது சுற்றித் திரிந்த நபா்களுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.
ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், காவல் ஆய்வாளா் லட்சுமி ஆகியோா் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவசியமின்றி சுற்றித்திரிந்த நபா்களை நிறுத்தி, அவா்களுக்கு நோய்த் தொற்று குறித்து, விழிப்புணா்வை ஏற்படுத்தியதுடன், கட்டாயம் முகக் கவசம் அணியவும், வீணாக சுற்றித் திரியக்கூடாது என்றும் அவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.