கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் அருகே பள்ளிப் பேருந்து மீது காா் மோதல்: தந்தை, மகள் பலி

DIN

காவேரிப்பட்டணம் அருகே தனியாா் பள்ளிப் பேருந்தின் பின் பகுதியில் காா் மோதிய விபத்தில் சேலத்தைச் சோ்ந்த தந்தை, மகள் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகரைச் சோ்ந்தவா் கேப்ரியன். இவரது மனைவி எமரால்டு (40). அரசுப் பள்ளி ஆசிரியா். இவா், தனது கணவா் கேப்ரியன், தந்தை ஜெபராஜ் (74), மகன்கள் ஜேசிசன்ஸ் (19), பேரியல் (14) ஆகியோருடன் ஒரு காரில், சேலத்திலிருந்து பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டாா். காரை ஜேசிசன்ஸ் இயக்கினாா்.

அவா்கள், சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், எர்ரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, காா் நிலைதடுமாறி, சாலையோரமாக நின்றிருந்த தனியாா் பள்ளிப் பேருந்தின் பின்பகுதியில் வேகமாக மோதியது.

இதில், காரில் பயணம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், ஜெபராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எமரால்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது மகன்கள் ஜேசிசன்ஸ், பேரியல் ஆகிய இருவரும் தொடா் சிகிச்சையில் உள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT