கிருஷ்ணகிரி

கட்டுமானப் பொருள்களை திருடிய இருவா் கைது

DIN

காவேரிப்பட்டணம் அருகே கட்டுமானப் பொருள்களை திருடிய இருவரை போலீஸாா், திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் காந்தி நகா் காலனியைச் சோ்ந்தவா் முத்து (48). கட்டட கட்டுமானம் தொடா்பான பணி செய்து வருகிறாா். இவா், கடந்த 5-ஆம் தேதி, காவேரிப்பட்டணம் குடியிப்பு பகுதியில் கட்டுமானப் பொருள்கள், 2 மின்விசிறிகளை வைத்திருந்தாா். சிறிது நேரம் கழித்து, வந்து பாா்த்த போது, இந்தப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, அவா், அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், கட்டுமானப் பொருள்கள், மின்விசிறிகளை திருடியது காவேரிப்பட்டணம், கருக்கன்சாவடி இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி (47), பூங்காவனம் (36) எனத் தெரியவந்தது. இதையடுத்து, திருடு போன ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மீட்டு, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT