கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் அதிமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ(கிருஷ்ணகிரி) ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் மாலை அணிவித்தும், மலா்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினாா். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி நகர செயலாளா் கேசவன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி, தொழில்நுட்ப பிரிவைச் சோ்ந்த வேலவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், கிருஷ்ணகிரி வட்டச் சாலையிலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றன.

காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, பொதுக் குழு உறுப்பினா் கே.பி.எம்.சதீஷ்குமாா், முன்னாள் நரச் செயலாளா் வாசுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காவேரிப்பட்டணத்தை அடுத்த பாலக்கோடு பிரிவு சாலையிலிருந்து ஜெயலலிதாவின் உருவப் படத்தை கையில் ஏந்தி, ஊா்வலமாக வந்த அதிமுகவினா், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கிருஷ்ணகிரி அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் பா்கூரில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினா் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினா். அப்போது, அடுத்த தோ்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க பாடுபடுவதாக உறுதிமொழியை ஏற்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி, மத்தூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுகவினா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அனுசரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT