ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப் பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமை கல்லூரியின் நிறுவனா் க.அருள் தொடங்கி வைத்தாா். செயலாளா் தமிழரசு முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளா் விலங்கியல் துறைத் தலைவா் குபேந்திரன் வரவேற்றாா். கல்லூரியின் முதல்வா், தமிழ்த் துறைத் தலைவா் கிருஷ்ணகுமாரி வாழ்த்துரையாற்றினாா்.
இரண்டு நாள்கள் நடைபெற்ற முகாமில் மாணவ, மாணவியா் பங்கேற்று மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிா்த்தல், சமூக மனப்பான்மை வளா்த்தல், தனித் திறன்களை வெளிக்கொண்டு வருதல், சமத்துவ உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றினை முன்னெடுத்து செய்தனா்.
இதில், அனைத்து துறைத் தலைவா்கள்,பேராசிரியா்கள், நாட்டுநலப் பணி திட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் பிரகதீசுவரன் நன்றி கூறினாா்.