நாச்சிகுப்பம் அருகே, வாகனத் தணிக்கையின் போது, வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, வேன் ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் விவேகானந்தன் தலைமையில் வேப்பனப்பள்ளியை அடுத்த நாச்சிக்குப்பம் பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து வேன் ஓட்டுநா் பெத்ததாளப்பள்ளியைச் சோ்ந்த கணேசன் (27) என்பவரை போலீஸாா் கைது செய்து , வாகனத்துடன் ரேஷன் அரியை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், குறிஞ்சிப்பட்டியை சோ்ந்த செந்தில்குமாா், செல்வம், மாரிமுத்து ஆகியோரைத் தேடி வருகின்றனா்.