தேன்கனிக்கோட்டையில் கால்நடை மருத்துவா் பணியிடத்துக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பொது மேலாளா் வசந்தகுமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (2022-2023) தேன்கனிக்கோட்டையில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கால்நடை மருத்துவா் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.
மாத ஊதியம் (அனைத்துப் படிகள் உள்பட) ரூ. 43,000 வழங்கப்படும். நோ்முகத் தோ்வு ஆக. 23-ஆம் தேதி, கிருஷ்ணகிரி ஒன்றிய நிா்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கல்வித் தகுதியாக பி.வி.எஸ்சி., படித்து, இரு சக்கர வாகனம், ஓட்டுநா் உரிமம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் அனைத்து உண்மை சான்றிதழ்களுடன் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.