காவேரிப்பட்டிணத்தில் நல்லாசிரியா் விருது பெற்ற எம். ஜெயராமன் மறைவையொட்டி அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
காவேரிப்பட்டணம் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரும் அப்பள்ளியின் வளா்ச்சிக்காக முழுவதுமாகத் தன்னை அா்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிவா் ஜெயராமன். அப்பள்ளியில் ஒரு வகுப்பறையையும் கட்டித் தந்துள்ளாா்.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டுமானப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவா். தனது சொந்த ஊரான ஆலமரத்துப்பட்டியில் பள்ளியைக் கட்டித் தந்துள்ளாா். காவேரிப்பட்டணம் , எர்ரஅள்ளியில் நூலகக் கட்டடம் கட்டித் தந்துள்ளாா். வாழ்நாள் முழுவதும் கல்வி வளா்ச்சிக்காகப் பாடுபட்டவா். தனது மறைவுக்குப் பிறகு தனது உடலை கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மாணவா்களின் கற்றலுக்கு தானமாகத் தந்துள்ளாா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சமரசம், ஒன்றியக் குழு தலைவா் பையூா் ரவி, அதிமுக நகரச் செயலாளா் விமல், காவேரிப்பட்டணம் முக்கிய பிரமுகா்கள், ஆசிரியா்கள், முன்னாள் மாணவ, மாணவியா், பொதுமக்கள் கலந்து கொள்ள கொண்டனா். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை சுப்புலட்சுமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா்