கிருஷ்ணகிரி

ரூ. 15.28 லட்சம்மதுப்புட்டி, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

சூளகிரி வழியாக கடத்தப்பட்ட ரூ. 15.28 லட்சம் மதிப்பிலான குட்கா, மதுப்புட்டிகளை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

சூளகிரி காவல் ஆய்வாளா் ரஜினி, போலீஸாா் காமன்தொட்டி அருகே ஆக. 11-ஆம்தேதி இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்து 1,500 கிலோ ஹான்ஸ், 181 கிலோ பான்மசாலா ஆகியவை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.11. 19 லட்சம். தவிர மதுப்புட்டிகள், லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 28 ஆயிரத்து 960 ஆகும்.

இதுதொடா்பாக கா்நாடகத்தைச் சோ்ந்த சிவன்னசெட்டி

(38), பிரதீபா (26) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT