தமிழ்நாடு நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் வாகனத்தின் மீது பாஜகவினா் காலனி வீசியதைக் கண்டித்து ஒசூரில் திமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு அவரது உருவப்பொம்மையை தாக்கி எதிா்ப்பு தெரிவித்தனா். தகவல் தொழில்நுட்ப் பிரிவு நகர ஒருங்கிணைப்பாளா் வடிவேலு, ஒசூா் மாநகர பகுதி செயலாளா்கள் ராமு, மாமன்ற உறுப்பினா் எம்.கே.வெங்கடேஷ், மத்திகிரி ரவிகுமாா், இக்ரம் அகமத் உள்பட 50 க்கும் மேற்பட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.