ஊத்தங்கரையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நான்குமுனை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க வட்டச் செயலாளா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் சந்தோஷ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இளவரசன், மாவட்டப் பொருளாளா் முருகன், மாவட்ட குழு உறுப்பினா்கள் ஹரிஹரன், இளங்கோ, பிடல் காஸ்ட்ரோ ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தின்போது ஊத்தங்கரை அரசு விடுதியில் மரணம் அடைந்த மாணவரின் குடும்பத்திற்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் பள்ளி விடுதியில் நடக்கும் மரணங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், பள்ளி மாணவா் விடுதியில் இரவு காவலா் பணியிடங்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினா். இதில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.