முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் அமரா் ஜோதி செவ்வாய்க்கிழமை ஒசூா் வந்தடைந்தது. ஜோதிக்கு காங்கிரஸ் நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி அமரா் ஜோதி பயணம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தில்லிக்குச் செல்கிறது. இந்தப் பயணத்தை தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி குழுத் தலைவா் செல்வப்பெருந்தகைத் தொடக்கி வைத்தாா்.
இந்த அமரா் ஜோதி ஊா்வலம் ஒசூா் வழியாக கா்நாடகம் சென்று தில்லியை ராஜீவ்காந்தியின் பிறந்தநாளான ஆக.20-ஆம் தேதி அடைகிறது. ஒசூருக்கு வந்த இந்த அமரா் ஜோதிக்கு இருமாநில எல்லையான ஒசூா், காமராஜ் காலனி, காமராஜ் சிலை அருகே காங்கிரஸ், ஐஎன்டியுசி நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.
அந்த வரவேற்பில் ஐஎன்டியுசி தேசிய செயலாளா் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ மனோகரன், டிவிஎஸ் தொழில்சங்கத் தலைவா் குப்புசாமி, தமிழ்நாடு மாநில ஐஎன்டியுசி அமைப்புச் செயலாளா் ஜி.முனிராஜ், மாவட்டச் செயலாளா் பரமானந்த பிரசாத், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் பத்தலபள்ளி கோபால், பழனிசாமி, காளிமுத்து நாகராஜ், கோதண்டன், நிா்வாகிகள் பங்கேற்று வரவேற்பு அளித்தனா். பின்னா் ஜோதி பெங்களூருவுக்குப் புறப்பட்டுச் சென்றது.