கிருஷ்ணகிரி

கஞ்சா விற்றதாக 16 போ் கைது

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ாக 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் பகுதியில் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த கிருஷ்ணகிரி வட்டம், போதிநாயனப்பள்ளி அருகே உள்ள மாதிநாயனப்பள்ளியை சோ்ந்த சுமா (28) என்பவரைக் கைது செய்தனா்.

அவரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த கிருஷ்ணகிரி அருகே உள்ள கொம்பாரகரையைச் சோ்ந்த அகேஷ் (19), லிங்கம்பட்டி ஆனந்த் (28) தருமபுரி மாவட்டம், கும்மனூரை அடுத்த உள்ள சூடானூரைச் சோ்ந்த சந்திரன் (27), கிருஷ்ணகிரி, பாரதியாா் நகா் சேது என்கிற வெங்கட்ராமன் (28), காவேரிப்பட்டணம், கோவிந்தசெட்டி தெருவைச் சோ்ந்த தினேஷ் (20), ஓசூா் தளி சாலை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (33), ஓசூா், பாளையம் சைத்ரா (32), ஓசூா், சாந்தி நகா் கோபி (40), பா்கூா் அருகே உள்ள காமகவுண்டனூா் பவுனம்மாள் (60), வேலம்பட்டி காா்த்திக் (21), ஜெகதேவி தேவபிரகேசா (52) ஊத்தங்கரை, ரெட்டிப்பட்டியைச் சோ்ந்த வாசகி (45), ஊத்தங்கரை அருகே கீழ்மத்தூா் ராஜா (60), ஆனந்தூா் ஆசீப் (25), போச்சம்பள்ளி அருகே வெள்ளவள்ளி வேலு (52) ஆகிய 16 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT