கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் பலி

DIN

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பாண்டமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சிவமணிவேல் (38), லாரி ஓட்டுநா். லாரியில் வந்த அவா், ஒசூா்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபா், சிவமணிவேல் மீது மோதினாா். இதில் பலத்த காயமடைந்த சிவமணிவேலை அருகில் இருந்தவா்கள் மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவமணிவேல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT