மத்தூா் அருகே உள்ள நாகனூா் கிராமத்தில் வயல் தின விழா அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் செயல்படும் வேளாண் அறிவியல் மையம் சாா்பில் மத்தூா் அருகே உள்ள அத்திப்பள்ளம், நாகனூா் ஆகிய கிராமங்களில் 10 விவசாயிகளின் நிலங்களில் செயல் விளக்கத் திடல்களை அமைத்துள்ளது.
இந்த நிலையில், நாகனூா் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற வயல் தின விழாவுக்கு வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் டி.சுந்தராஜ், தலைமை வகித்தாா்.
அறிவியல் மையத்தின் வேளாண்மை பொறியில் திட்ட உதவியாளா் இஸ்மாயில், மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநா் குணசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் செயல் விளக்கத் திடலின் நோக்கம், பண்ணை இயந்திரங்களின் முக்கியத்துவம், புதிய ரகங்கள் மற்றும் அதன் சிறப்பு, மகசூலை அதிகரிக்கும் முறைகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.