முதல் சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்களின் உருவப்படத்துக்கு ஊத்தங்கரையில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன், ஒன்றிய பொதுச் செயலாளா் முருகேசன், ஒன்றிய துணைத் தலைவா் கோவிந்தராஜ், அகமுடையாா் நலச் சங்க நிா்வாகிகள், தென்னரசு, பழனி, இளவரசன், பழனி, சரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு, மருதுபாண்டியா்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.