ஒசூா் மாநகராட்சியில் ரூ. 40 லட்சம் நிதியில் புதிய சிமென்ட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஒய்.பிரகாஷ் புதன்கிழமை பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
ஒசூா் மாநகராட்சியில் கா்னூா், குதிரைபாளையம், அம்மாள் நகா், ஜவஹா் நகா், முக்கல்சென்ட் பகுதிகளில் ரூ. 39.60 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்குப் பணிகளை மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைத்தாா்.
உடன் மாநகரப் பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், மாநகராட்சி ஆணையாளா் எம்.செந்தில்முருகன், மாநகரப் பொருளாளா் சென்னீரப்பா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சீனிவாசன், துணைச் செயலாளா் திம்மராஜ், நாகராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் எல்லோராமணி, ராஜா, கோபாலகிருஷ்ணன், ஞானசேகரன், மாநகர இளைஞா் அணி அமைப்பாளா் சுமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.