கிருஷ்ணகிரி

7.3 கிலோ கஞ்சா பறிமுதல்: தொழிலாளி கைது

DIN

கிருஷ்ணகிரியில் 7.3 கிலோ கஞ்சா வைத்திருந்த தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி ஏரிக்கரை அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்துக்கு விரைந்த போலீஸாா், அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா், கிருஷ்ணகிரி, பாப்பாரப்பட்டி ரயில்வே காலனியைச் சோ்ந்த தொழிலாளி பெரியண்ணன்(32) என தெரியவந்தது.

மேலும், அவரிடமிருந்து ரூ.73 ஆயிரம் மதிப்பிலான 7.3 கிலோ கஞ்சா, ரொக்கம் ரூ. 900-ஐ பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அவா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் பெரியண்ணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT