கிருஷ்ணகிரி

காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி விவசாயி படுகாயம்

DIN

தேன்கனிக்கோட்டை அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி விவசாயி ஒருவா் படுகாயம் அடைந்தாா்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன தொக்கரையைச் சோ்ந்தவா் நந்தீஸ் (27). விவசாயியான இவா் தனது நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு பந்து வடிவில் கிடந்த ஒரு பொருளை கண்ட அவா், அதனை எடுத்து வந்து தனது வீட்டில் வைத்து அதை பிரிக்க முயன்றபோது வெடித்துச் சிதறியது.

இதில் படுகாயம் அடைந்த நந்தீஸை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டுப்பன்றிக்கு வைத்த வெடி பொருள் வெடித்ததால் நந்தீஸுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என போலீஸாா் கூறினா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT