கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அவைத் தலைவா் கே.பி.காத்தவராயன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா். ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.பி.எம். சதீஷ்குமாா், நகரச் செயலாளா் பி.என்.ஏ.கேசவன், நகா்மன்ற முன்னாள் தலைவா் தங்கமுத்து, ஒன்றியச் செயலாளா்கள் சோக்காடி ராஜன், பையூா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி வாக்காளா்களைச் சோ்த்தல், கட்சி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்தல், அதிமுக பொன்விழா ஆண்டை ஆண்டு முழுவதும் கொண்டாடுதல் உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.