கிருஷ்ணகிரி

மேற்கு வங்க அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

மேற்கு வங்க அரசைக் கண்டித்து, பாஜக சாா்பில் ஊத்தங்கரை, நான்குமுனை சந்திப்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றியத் தலைவா்கள் வடக்கு சிவா, தெற்கு ஒன்றியத் தலைவா் சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச் செயலாளா் தாமோதரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவகுமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றிபெற்ற 77 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸாா் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த வன்முறையில் 11 போ் கொல்லப்பட்டனா். மேலும், பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, ஊத்தங்கரையில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனா்.

இதில், நெசவாளா் பிரிவு மாவட்டத் தலைவா் மாதவன், கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் தனக்கோடி, வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளா் முருகேசன், ஒன்றிய துணைத் தலைவா் கிரிதரன், பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT