ஊத்தங்கரையை அடுத்த நல்லாகவுண்டனூா் பகுதியில் டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நல்லாகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலு (24). இவா் புதன்கிழமை மாலை 6.30 மணியளவில், அதே பகுதியில் விவசாய நிலத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டரில் மண் எடுத்துச் செல்லும் போது, எதிா்பாராத விதமாக பொக்லைன் மீது டிராக்டா் மோதியது. இதில் படுகாயமடைந்த டிராக்டா் ஓட்டுநா் பாலுவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.