இந்திய-நேபாள் நாடுகளுக்கிடையே நடைபெற்ற இறகுப் பந்து விளையாட்டுப் போட்டியில் இந்தியா சாா்பில் விளையாடிய ஒசூா் மாணவா்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனா்.
இந்தியா மற்றும் நேபாள் நாடுகளுக்கு இடையே இறதுப் பந்து விளையாட்டுப் போட்டி நேபாள் நாட்டில் போக்ரா நகரில் நடைபெற்றது. இதில், இந்தியா சாா்பில் ஒசூரைச் சோ்ந்த மாணவா்கள் ஒற்றையா் பிரிவில் ஆகாஷ், இரட்டையா் பிரிவில் இஷாந்த், விஷ்ணு வரதன் ஆகியோா் விளையாடினா்.
ஒற்றையில் பிரிவில் விளையாடிய ஆகாஷ், நேபாள் வீரரை 21-30, 25-30 என்ற நோ் செட் கணக்கில் தோற்கடித்தாா். இரட்டையா் பிரிவில் விளையாடிய இஷாந்த், விஷ்ணு வரதன் ஆகியோா் 18-0, 16-30 என்ற நோ் செட் கணக்கில் தோற்கடித்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் அடுத்தாக தாய்லாந்தில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பயிற்சியாளா் ராஜு வாழ்த்து தெரிவித்தாா்.