கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில்  இரண்டு லாரிகள் தீப்பிடித்து எரிந்தது போக்குவரத்து பாதிப்பு

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலிருந்து கிருஷ்ணகிரியை நோக்கி சரக்குப் பெட்டக லாரி, இன்று பயணித்தது.

கிருஷ்ணகிரியை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு ஓட்டல் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது அதன் டயர் வெடித்ததால், நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியதில், இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிய தொடங்கின.

தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி நகர  காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT