கிருஷ்ணகிரி

மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

7th Jul 2021 08:51 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்டத் தலைவா் தூா்முகமது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வாஹித் பாஷா, தலைமைக் கழக செயலாளா் நவ்ஷாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை ஏற்றத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT