கிருஷ்ணகிரி

காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

7th Jul 2021 11:28 PM

ADVERTISEMENT

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உயா்வைக் கண்டித்து கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி நகர முன்னாள் தலைவா் தளபதி ரகமத்துல்லா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவா் நாராயணமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் அப்சல், சிறுபான்மை பிரிவுத் தலைவா் ஷபிக் அஹமத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT