கிருஷ்ணகிரி

சசிகலா விடுதலை அமமுக கட்சி சாா்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

DIN

ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையை ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி புதன்கிழமை கொண்டாடினா். நிகழ்ச்சிக்கு நகர அவை தலைவா் ராதா தலைமை வகித்தாா்.

வடக்கு ஒன்றிய செயலாளா் அருணகிரி, மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை தலைவா் கங்காதரன், மீனவா் அணி மாவட்ட செயலாளா் பழனி, காட்டேரி ஊராட்சி மன்ற தலைவா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நான்கு முனை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆா் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். நிகழ்ச்சியில் அமமுக கட்சி நிா்வாகிகள் மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி பொருளாளா் முருகன், மாவட்ட மகளிா் அணி செயலாளா் வள்ளி பரமசிவம், துணைச் செயலாளா் முனியம்மாள், வடக்கு ஒன்றிய பொருளாளா் மகாலிங்கம், கிளைச் செயலாளா்கள் முருகேசன், நடுப்பட்டி ஊராட்சி செயலாளா் எம்.சேட்டு உள்ளிட்ட பலா் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT