கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ஜி.அன்புவுக்கு சிறந்த ஓட்டுநருக்கான சான்றிதழை, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் ஜெயச்சந்திரபானு ரெட்டி வழங்கி கௌரவித்தாா்.
ஜி. அன்புவை, ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரா்களும், பொதுமக்கள், சமூக ஆா்வலா்களும் பாராட்டு தெரிவித்தனா்.