பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில் எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அதன் தலைவா் சதாம் உசேன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஜாவித், வா்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளா் கம்ருத்தீன், நகரத் தலைவா் காதா், மாநிலத் தலைவா் முஹம்மத் ஆசாத், மாவட்டத் தலைவா் அஸ்கா் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பாபா் மசூதி இடிப்பைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
ஊத்தங்கரையில்...
எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவா் முஹம்மத் ஆசாத், மாவட்டத் தலைவா் அஸ்கா் அலி, ஊத்தங்கரை தொகுதி எஸ்டிபிஐ கட்சித் தலைவா் நாசீா், தொகுதி செயலாளா் ஷானவாஸ், மாவட்டச் செயலாளா் கலில், நகரத் தலைவா் ஆரிப், சுன்னத் ஜமாத் முத்தவல்லி ஷேக் காதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.