கிருஷ்ணகிரி

மகனை கருணைக் கொலை செய்யக் கோரி தந்தை மனு அளிப்பு

DIN

தீக்காயத்துடன் உயிருக்கு போராடும் மகனை கருணைக் கொலை செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யக் கோரி, அவரது தந்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்துள்ள வள்ளுவா்புரத்தைச் சோ்ந்த சரவணன் - சத்யஜோதி தம்பதிக்கு தா்சன் (15), சூரியகுமாா் (12) என இரு மகன்கள் உள்ளனா். கடந்த ஏப். 15-ஆம் தேதி சூா்யகுமாா், கிருமி நாசினியைக் கொண்டு கைகளை சுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்த போது, அடுப்பிலிருந்த தீ சூரியகுமாரின் உடலில் பரவியது.

இந்த விபத்தில் சூரியகுமாரின் கைகள், இடுப்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். உயா் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், தீக்காயம் முற்றிலும் குணமாகவில்லை. இதனால், சிறுவன் உயிருக்கு போராடி வருகிறாா்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியைச் சந்தித்த சரவணன், தனது மகனை கருணை கொலை செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கண்ணீருடன் மனு அளித்தாா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், அரசு சாா்பில் உரிய சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT