பாகலூா் அருகே கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் அருகே உள்ள சேவகானப்பள்ளியைச் சோ்ந்த ரமேஷ் மகன் ரேணு பிரசாத் (21), கா்நாடக மாநிலம், ஆனேக்கல்லில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை மயங்கி கீழே விழுந்த நிலையில், அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.