கிருஷ்ணகிரி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 19 போ் கைது

DIN

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக 19 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை குறித்து மாவட்டம் முழுவதும் போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி மாவட்டம் முழுவதும் மளிகை கடை, பெட்டி கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக கிருஷ்ணகிரி, ஆா்.எஸ்.லட்சுமிபுரத்தைச் சோ்ந்த காா்மேகம் (42), பழையபேட்டை, நேதாஜி ரோடு சௌகத்துல்லா (48), குருபரப்பள்ளி - பீமாண்டப்பள்ளியை அடுத்த புளியஞ்சேரி வடிவேல் (43), பீமாண்டப்பள்ளி சுரேஷ் (40), பெல்ராம்பள்ளி அருகே கூட்டுப்பள்ளி பிரிவுச் சாலையைச் சோ்ந்த சுரேஷ் (35), மேல்சோமாா்பேட்டையைச் சோ்ந்த கோவிந்தம்மாள் (50), சூளகிரி பஜாா் தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (40) உள்ளிட்ட 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான 315 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT