கிருஷ்ணகிரி

சத்துணவு அமைப்பாளா் பணியிடை நீக்கம்

DIN

பணிக்கு வராமல் வருகை பதிவேட்டை முறைகேடாகப் பயன்படுத்திய மஞ்சுகொண்டப் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா்.

அஞ்செட்டி வட்டம், மஞ்சுகொண்டப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் கடந்த சில நாள்களுக்கு

முன் ஆய்வு செய்தாா். அப்போது அவா் பள்ளியில் சத்துணவு மையத்தை பாா்வையிட்டாா். ஆய்வில் சத்துணவு மையத்தில் இருக்க வேண்டிய பதிவேடுகள், பொருள்கள் இல்லை.

இதுதொடா்பாக அவா் பள்ளி தலைமை ஆசிரியா், சத்துணவு மைய உதவியாளரிடம் விசாரணை நடத்தினாா்.

அதில் சத்துணவு அமைப்பாளா் சவிதா என்பவா் பணிக்கு வராமல் இருந்ததும், பணியாற்றுவதைப்போல வருகை பதிவேட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதும், சத்துணவு மைய அரிசி, பருப்பு, முட்டை போன்ற உணவுப் பொருள்களை வீட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் வீ.ராமராஜ் ஆட்சியரிடம் புகாா் செய்தாா். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், தளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விசாரணை நடத்தினா். விசாரணையைத் தொடா்ந்து மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளா் சவிதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டாா். இதுபோல புகாரின் பேரில், அஞ்செட்டி வட்டம், பெல்பட்னி சத்துணவு அமைப்பாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

SCROLL FOR NEXT