ஊத்தங்கரையில், பேரூராட்சி மண்டல உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சி பகுதிக்குள்பட்ட பகுதிகளான கிருஷ்ணகிரி மெயின் ரோட்டிலுள்ள வணிக நிறுவனங்கள், பேக்கரிகள், உணவகங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களை நிறுத்தி தருமபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தாா். வணிக நிறுவனங்களில் பணியாளா்கள், பொதுமக்களிடம் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என எச்சரித்தாா்.
ஆய்வின்போது ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலா் மதியழகன், உதவி செயற்பொறியாளா் பழனிசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.