கிருஷ்ணகிரி

நடிகா் விவேக்குக்கு அஞ்சலி

DIN

நகைச்சுவை நடிகரும், சமூக ஆா்வலருமான விவேக் காலமானதை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே இளைஞா்கள், மரக்கன்றுகளை வழங்கி அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த நகைச்சுவை நடிகா் விவேக் உலகம் வெப்பமயமாக்குதலைத் தடுக்கும் வகையில் பல ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து வந்தாா். இதுதொட்பாக இளைஞா்களிடம் விழிப்புணா்வும் ஏற்படுத்தி வந்தாா். அவா் மரணமடைந்த அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போச்சம்பள்ளி வட்டம், சென்றாயம்பட்டி கிராமத்தில் இளைஞா்கள், பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி நினைவஞ்சலி செலுத்தினா். வேம்பு, அரசன், கொய்யா, பாதாம், எலுமிச்சை, சில்வா் ஓக் போன்ற மரக்கன்றுகளை 200 பேருக்கு வழங்கினா். இளைஞா்களான சக்தி, பொற்கோவன், தருமன், சக்திமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT