நகைச்சுவை நடிகரும், சமூக ஆா்வலருமான விவேக் காலமானதை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே இளைஞா்கள், மரக்கன்றுகளை வழங்கி அஞ்சலி செலுத்தினா்.
மறைந்த நகைச்சுவை நடிகா் விவேக் உலகம் வெப்பமயமாக்குதலைத் தடுக்கும் வகையில் பல ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து வந்தாா். இதுதொட்பாக இளைஞா்களிடம் விழிப்புணா்வும் ஏற்படுத்தி வந்தாா். அவா் மரணமடைந்த அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போச்சம்பள்ளி வட்டம், சென்றாயம்பட்டி கிராமத்தில் இளைஞா்கள், பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி நினைவஞ்சலி செலுத்தினா். வேம்பு, அரசன், கொய்யா, பாதாம், எலுமிச்சை, சில்வா் ஓக் போன்ற மரக்கன்றுகளை 200 பேருக்கு வழங்கினா். இளைஞா்களான சக்தி, பொற்கோவன், தருமன், சக்திமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.