ஊத்தங்கரையை அடுத்த பெரியதள்ளப்படி கிராமத்தில் தீரன் சின்னமலையின் 266-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கொங்கு வேளாளா் சமுதாய நிா்வாகி பழனி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் டி.என். தில்லையப்பன், ஊா்க்கவுண்டா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெரியதள்ளப்பாடி பேருந்து நிலையம் எதிரே சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பலா் கலந்து கொண்டனா்.