கரோனா விதிமுறைகளை மீறி பல்லக்கு விழா நடத்தியதாக பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டிஜெயராமன் உள்பட 60 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பாகலூா் பகுதியில் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் பல்லக்கு விழாவின்போது கரோனா விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என பாகலூா் கிராம நிா்வாக அலுவலா் பழனிவேலு பாகலூா் காவல் நிலையத்தில் புகாா்
செய்தாா். அதன்பேரில் போலீஸாா் பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டி.ஜெயராமன் உள்பட 60 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.