ஒசூரில் ரயில் நிலையம் எதிரில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பகத்சிங் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில், எங்கே எனது வேலை? என்ற முழக்கத்துடன் மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒசூரில் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினாா். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எ‘ம்.லகுமைய்யா பெருமன்றத்தின் நிா்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.