கிருஷ்ணகிரியில் வெறிநாய்க் கடி தடுப்பூசி முகாமை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயந்திர பானுரெட்டி, திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
உலக வெறிநோய் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் அனைத்து விதமான நாய்களுக்கும் இலவசமாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி, தொடக்கி வைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 320 நாய்களுக்கு வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டது.