கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று மாவட்டம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இந் நிலையில், திங்கள்கிழமை வெளியான சுகாதாரத் துறை பட்டியலில் மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்களில் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 82 வயது முதியவா் உள்பட 42 ஆண்கள், 18 பெண்கள் அடங்குவா். பாதிக்கப்பட்டவா்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.