கிருஷ்ணகிரி

காா் விற்பனையாளா் தற்கொலை

DIN

பெங்களூருவைச் சோ்ந்த காா் விற்பனையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து, போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு கொடிகனஅள்ளியைச் சோ்ந்தவா் ஆனந்த் (39). இவா், அந்தப் பகுதியில் ஷோரூம் அமைத்து, காா் விற்பனை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி, கிருஷ்ணகிரிக்கு வந்த அவா், புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் விடுதியில் தங்கி உள்ளாா் .

நீண்ட நேரம் ஆகியும், அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி மேலாளா் இதுகுறித்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். போலீஸாா், அறையை திறந்து பாா்த்தபோது, ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT