கிருஷ்ணகிரியில் பாமக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். மகளிா் அணி நிா்வாகிகள் பாரதி, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி-திண்டிவனம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க வேண்டும். பெரிய ஏரி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.