கிருஷ்ணகிரி

சூளகிரியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம்

DIN

சூளகிரியை தலைமையிடமாகக் கொண்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செப். 25-ஆம் தேதி முதல் செயல்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ஜெ.சுதாகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் கட்டுப்பாட்டில் கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு கிருஷ்ணகிரி உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இனி இந்த அலுவலகம் சூளகிரி சுற்று வட்டார மக்களின் நலன் கருதி, செப். 25-ஆம் தேதி முதல் சூளகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். மேற்கண்ட அலுவலகம் சூளகிரி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், துணை மின்நிலைய வளாகம் என்ற முகவரியில் செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT